அமைப்பினரால் கவனயீர்ப்புப்போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது. இளையோர் அமைப்பினரால் நான்காவது முறையாக முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான மக்கள் உணர்வுடன் பங்கேற்றுள்ளனர். பிரான்சில் தமிழர்களின் வர்த்தக மையப்பகுதியான லாச்சப்பல் பகுதியில் வாரம்தோறும் முன்னெடுக்கப்படும் இக்கவனயீர்ப்புப்போராட்டத்தில் இம்முறை பெருந்தொகையான இளையோரும் இளையோர் அமைப்பினருடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிகழ்வின்போது எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதியன்று கறுப்புதினமாகப்பிரான்சில் வாழும் தமிழர்களால் முன்னெடுக்கப்படுவதையும் மக்களுக்கு வெளிப்படுத்தியிருந்தனர். வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் தியாகத்தின் வழியில் நாம் தொடர்ந்து எமது இனம் விடுதலை பெறும்நாள்வரை போராடுவோம் என்று உறுதி எடுத்துக்கொண்டதோடு போராட்டத்தை நிறைவிற்குக்கொண்டுவந்தனர்.
|