முல்லைத்தீவில் இருந்து மற்றொரு தொகுதி நோயாளர்களை ஏற்றிக் கொண்டு
ஒசீன் என்ற கப்பல் நேற்று வியாழக்கிழமை 12.02.2009 மாலை 7.00 மணிக்கு திருகோணமலை வந்தடைந்தது.
இக்கப்பலல் கோணேஸ்வரம் கடற்பரப்பில் நங்கூரமிட்டிருக்க கப்பலில் இருந்த நோயாளர்கள் மனையாவெளி கடற்கரைப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சிறிய படகுகள் மூலம் இரவு 8.00 மணி தொடக்கம் நோயாளர்கள் இறக்கப்பட்டு
பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை ஏற்கனவே கப்பல் மூலம் திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டு
பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறிய காயங்களுக்கு உள்ளானவர்களும், ஓரளவு சிகிற்சை பெற்று உள்ள நிலையில் இருப்பவர்ளை
இடவசதி போதாமை காரணமாக படையினரால் பொது வைத்தியசாலையில்
இருந்து அழைத்து வரப்பட்டு அருகில் உள்ள மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டள்ளனர்.
இவர்கள யாரும் பாடசாலயில் இருந்து வெளியேறாதவாறு பொலிசாரும் கடற்படையினரும் பாடசாலையைச் சுற்றி காவலுக்கு அமர்த்தப்பட்டுள்னர்.
|