பிரான்சின் தமிழர் மையப்பகுதியான லாச்சப்பல்பகுதியில் பிரான்சு வாழ்தமிழர்களால் மாவீரன் முருகதாசனின் தியாகத்தை நினைவுகொண்டு வணக்கநிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு பாரீசு லாச்சப்பலில் பி.ப 4.30 மணிக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் அதிமான மக்கள் கூடி மாவீரன் முருகதாசனின் திருவுருவப்படத்திற்கு தமது வணக்கங்களைத்தெரிவித்துள்ளனர்.
சுவிஸ் யெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைமுன்றலில் ஐக்கியநாடுகளை இலங்கைத்தமிழர் பிரச்சனையில் உடனடியாகத்தலையிடுமாறு கோரிக்கைகளை முன்வைத்து முருகதாசன் தனது இன்னுயிரை அர்ப்பணித்துள்ளார்.
மாவீரன் முருகதாசனின் உருவப்படத்திற்கு கூடியிருந்தோர் மெழுகுவர்த்திகள் ஏற்றி அஞ்சலி செலுத்தியதோடு அவ்விடத்தில் சிலர் கண்கலங்கி அழுத நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளது.
மேலும் பிரெஞ்சு ஊடகங்களே உண்மையைச்சொல்லுங்கள் கொலை கற்பழிப்பு பசி இன்றையதமிழர்களின் நிலை! கொல்லாதே! குழந்தைகளைக்கொல்லாதே ! முத்துக்குமார் ரவிச்சந்திரன் முருகதாசன் இன்னும் எத்தனைபேர் போன்ற கோசங்களைக்கூடியிருந்தோர் எழுப்பித்தமது உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
|