கவனயீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்,
புதன், வியாழக்கிழமைகளில் பாரீசின் முக்கியத்துவம் வாய்ந்த
சுற்றுலாப்பயணிகள் அதிகம் செறிந்துள்ள பகுதிகளில்
இப்பரப்புரைச்செயற்பாடுகள் பெண்கள் அமைப்பனரால்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தமிழின அழிப்பை இடைவிடாது தொடரும் சிறிலங்கா அரசாங்கத்தின், விமானசேவையினூடாக பயணம் மேற்கொள்வதை தமிழ்மக்கள் உட்பட
இந்நாட்டு மக்களும் புறக்கணிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி
துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துள்ளனர். அத்தோடு தமிழின
அழிப்பிற்குத் துணைபோகும் சிறிலங்காவின் உற்பத்திப் பொருட்களைப்
புறக்கணிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி
துண்டுப்பிரசுரங்களை இவர்கள் விநியோகித்திருந்தனர்.
இனப்படுகொலையின் உச்சத்தை வெளிப்படுத்திய துண்டுப்பிரசுரங்கள் தமிழ்ப்பெண்களால் மிகச்செறிவாக மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் வநியோகிக்கப்பட்டிருந்த இச்செயற்பாடு பிறநாட்டு மக்கள் மத்தியில்
விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
|